மேலும் செய்திகள்
அரிசி கடத்தலில் தப்பிய நபர் கைது
13-Aug-2024
ஈரோடு: ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ., மேனகா மற்றும் போலீசார், சிவ-கிரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தாண்டாம்பாளையம் பகு-தியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஒரு ஆம்னி வேனில், 21 மூட்டைகளில், 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிந்தது. கடத்தலில் ஈடுபட்ட சிவகிரி, பால-மேட்டுபுதுார் கனகராஜ், 54; சேலம் மாவட்டம் மேட்டூர், கோவிந்தபாடி, காரைக்காட்டை சேர்ந்த சஞ்சீவ்குமார், 26, ஆகி-யோரை கைது செய்தனர். ஆம்னி வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
13-Aug-2024