உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 28 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை

28 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை

ஈரோடு:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த மாதம் ஈரோடு மாநகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் டூ-வீலர், நான்கு சக்கர வாகனம் மற்றும் கன ரக வாகனத்தை குடிபோதையில் இயக்கியதாக, 28 பேரின் டிரைவிங் லைசன்சை கைப்பற்றினர். தற்காலிகமாக இவற்றை ரத்து செய்ய போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.இதேபோல் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் இயக்கியதாக, 1,428 வழக்கு; டூவீலரின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 230 வழக்கு; சீட் பெல்ட் அணியாமல் கார் இயக்கியதாக, 223 வழக்கு, குடிபோதை வாகன இயக்கம், 38 வழக்கு; மொபைல் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 43 வழக்குகள் என, 2,956 வழக்குகள் பதிவு செய்து, அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி