உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புதுமாப்பிள்ளையை கடத்திய 4 பேர் கைது

புதுமாப்பிள்ளையை கடத்திய 4 பேர் கைது

ஈரோடு, ஈரோடு, மாணிக்கம்பாளையம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரஷியாபானு, 25; இவருக்கும் சென்னையை சேர்ந்த ஹரிபிரசாத் மகன் நிஷான், 29, என்பவருக்கும் கடந்த, 4ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் சென்னையில் திருமணம் நடந்தது. நிஷான், சென்னையில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். திருமணம் முடிந்ததும் ஈரோட்டில் உள்ள ரஷியாபானு வீட்டுக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க நிஷான் சென்றார். அப்போது காரில் வந்த கும்பல், அவரை கடத்தி சென்றது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசுக்கு புகார் தரப்பட்டது. சேலம் மாவட்டம் தலைவாசலில், வாகன சோதனையில் காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களை ஈரோடு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.சென்னையில், 24 வயது பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கி விட்டு, ரஷியாபானுவை திருமணம் செய்ததும், அப்பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள், அந்த பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க நிஷானை கடத்தி சென்றதும் தெரியவந்தது.இது தொடர்பாக செங்கல்பட்டு, மேல கோட்டையூர், தமிழ்நாடு காவல் குடியிருப்பு வாரியத்தை சேர்ந்த சுசில் சுந்தரம், 33, ஜெகதீஷ், 30; சென்னை, துரைபாக்கம் திருவள்ளுவர் நகர் மோகன், 32; சென்னை, நீலாங்கரை, ராஜேந்திரன் நகர் கணேஷ், 24, என நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி