உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கமிஷனரிடம் வலியுறுத்தல்

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கமிஷனரிடம் வலியுறுத்தல்

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மணீஷிடம், மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நேற்று மனு அளித்தனர். அதில் கூறி-யிருப்பதாவது:மாநகராட்சி, 11வது வார்டு மாணிக்கம்பாளையத்தில், ஊராட்சிக்-கோட்டை கூட்டு குடிநீர் குழாய் இருந்தும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதேபோல் மூன்றாவது வார்டு ஜவுளி நகரில், பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். ௫4வது வார்டில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்-களை சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை