உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திண்டல் கோவிலில் கால்கோள்

திண்டல் கோவிலில் கால்கோள்

ஈரோடு, ஆக. 23-ஈரோடு, திண்டல் வேலாயுதசாமி கோவிலில், 3 கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்னதி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள் கட்டுவதற்கான கால்கோள் விழா, ராஜகோபுரத்துக்கு நிலைக்கால் வைக்கும் விழா நேற்று நடந்தது.இதில் அமைச்சர் முத்துசாமி, பிரகாஷ் எம்.பி, கோவில் செயல் அலுவலர் சுகுமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சிவகுமார், வேலாயுதசுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை