உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

ஈரோடு: பெருந்துறை குன்னத்துார் சாலை, செல்வம் நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக ஹிந்து மக்கள் முன்னணியில் செயல்பாட்டாளராக உள்ளேன். இந்து தர்ம சேவா அறக்கட்டளை அறங்காவலராகவும் உள்ளேன். பெருந்துறையில் கயிலை நந்தி கோசாலை அட்சய பாத்திரம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, சமூக சேவை செய்-கிறேன். எனது சமூக சேவைப்பணி, அமைப்பு ரீதியான பணிகளை கூறி, சில சமூக விரோதிகள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்-றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி