உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசிய எம்.பி., ராகுல் குறித்து, பா.ஜ., - எம்.பி., அனுராக் தாகூர் விமர்சனம் செய்தார். அவரது பேச்சை தடுக்காமல், பிரதமர் மோடி, இதுபோன்ற பேச்சை ஊக்கப்படுத்தியதாக கூறியும், இதை கண்டித்தும், காங்., கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சஞ்சய் சம்பத் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, தீபா, விஜயகண்ணா, பாபு, பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்