உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ஈரோடு, ஆனங்கூர்-காவிரி இடையே தண்டவாளத்தில் கடந்த, 4 மாலை, 3:30 மணிக்கு, 70 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. காவி வேட்டி, மஞ்சள் நிற துண்டு, வெள்ளை-ப்ளூ கோடு போட்ட டிராயர் அணிந்து இருந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை