உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1,330 குறள் ஒப்புவித்தல் போட்டி தளவாய்பட்டினம் மாணவி அபாரம்

1,330 குறள் ஒப்புவித்தல் போட்டி தளவாய்பட்டினம் மாணவி அபாரம்

திருப்பூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 1,330 திருக்குற-ளையும் ஒப்புவிக்கும் திறன் கொண்ட, மாணவ, மாணவியரை கண்டறிந்து, ஆண்டுதோறும் பரி-சுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்-கப்பட்டு வருகிறது. தலா, 15 ஆயிரம் ரூபாய் பரி-சுத்தொகை வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், திருக்குறள் முற்-றோதும் திறனாய்வு நேற்று நடந்தது. இதில் மாணவ, மாணவியர், 17 பேர் திருக்குறள் ஒப்புவித்தனர்.சிறந்தமுறையில் ஒப்புவித்த, தாராபுரம் தாலுகா தளவாய்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்-பள்ளி மாணவி தனுஸ்ரீ, பரிசு தொகைக்கு பரிந்து-ரைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை