உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிகரெட் பாக்கெட் திருடிய 2 பேர் கைது

சிகரெட் பாக்கெட் திருடிய 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், ஊத்துக்காடு பச்சப்பாளிமேட்டை சேர்ந்தவர் பால முருகன். தண்ணீர் பந்தல் பாளையத்தில் காபி பார் வைத்துள்ளார். இவரது கடையில், 74 பாக்கெட் சிகரெட், 6,500 ரூபாய் திருட்டு போனது. இதுகுறித்து விசாரித்த வீரப்பன்சத்திரம் போலீசார், பி.பெ.அக்ரஹாரம், அஜந்தா நகரை சேர்ந்த ஸ்ரீஹரி, 19; 15 வயது சிறுவனை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் ஸ்ரீஹரி அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !