நாய் கடித்து 3 ஆடுகள் பலி
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே சக்தி பாளையத்தை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன், 35; முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர். இவருக்கு சொந்தமான பட்டியில் புகுந்து தெருநாய்கள் நேற்று கடித்ததில், 3 ஆடுகள் பலியாகி விட்டனர். ஒரு ஆட்டை நாய்கள் துாக்கி சென்று விட்டன. தெருநாய்களால் ஆடுகள் பலியாவது தொடர்வதால், ஆடு வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர்.