உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு

4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு

ஈரோடு, அரசு போக்குவரத்து ஈரோடு மண்டலம் சார்பில், நான்கு புதிய பஸ்களின் இயக்கம், ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று தொடங்கியது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கொடியசைத்து பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார். ஈரோடு, நாமக்கல், திருச்சி வழியாக - தஞ்சாவூர், திருப்பூர், தாராபுரம், ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை, திருப்பூர், காங்கேயம், கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை என, 4 வழித்தடங்களுக்கான புதிய பஸ் இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை