உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடுத்தடுத்து ஆடுகள் திருட்டால் அதிர்ச்சி

அடுத்தடுத்து ஆடுகள் திருட்டால் அதிர்ச்சி

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே கரியாக்கவுண்டன் வலசு, தெற்கு வீதியை சேர்ந்தவர் வடிவேல், 66; கால்நடை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் மேய்ச்சல் முடிந்து, கட்டி சென்றார். நேற்று காலை சென்று பார்த்தபோது ஒரு ஆட்டை காணவில்லை. அதே பகுதியில் மற்றொருவரின் ஆடும் திருட்டு போயுள்ளது. ஒரே இரவில் இரு ஆடுகள் திருடப்பட்டுள்ளது. புகாரின்படி மொடக்குறிச்சி போலீசில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை