உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அங்கக விளை பொருட்களுக்கான சந்தை வரும் 4ம் தேதி ஈரோட்டில் நடத்த ஏற்பாடு

அங்கக விளை பொருட்களுக்கான சந்தை வரும் 4ம் தேதி ஈரோட்டில் நடத்த ஏற்பாடு

ஈரோடு:தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம், ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் உள்ள வாக்கர்ஸ் கிளப்பில் அங்கக வேளாண் சந்தை வரும் 4 காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடக்க உள்ளது. அங்கக முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்கள், மஞ்சள் துாள், எண்ணெய் வகைகள் போன்றவை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட உள்ளது. அங்கக சான்று பெற்று விளைவித்த வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகளும், நஞ்சு இல்லாத காய்கறிகள், பழங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்களை வாங்கிட விரும்பும் நுகர்வோர் அங்கக வேளாண் சந்தையில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.அங்கக வேளாண் சந்தையில் பங்கு பெற்று விளை பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை