உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில்திடீர் மழை

ஈரோட்டில்திடீர் மழை

ஈரோடு: ஈரோட்டில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் குளிர்ந்தது. ஈரோட்டில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது மட்டுமே பெய்கிறது. இரு வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் சிறிய தூறலாக மழை பெய்ய ஆரம்பித்து, சிறிது நேரத்தில் கடும் மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, ஈரோடு குளிர்ந்தது. மணிக்கூண்டு, சூரம்பட்டி வலசு உள்பட பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
அக் 01, 2025 13:16

குழந்தைகள் கொண்டு வரவேணாமென்று சொல்லியும் போயி.. சினிமாக்கள் மக்களை பிடித்து ஆட்டுகிறது.


மேலும் செய்திகள்