அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர்
அணையில் இருந்துவெளியேறும் உபரி நீர் டி.என்.பாளையம், அக். 27--டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சி குன்றி மலையடிவாரத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், சில நாட்களுக்கு முன் முழு கொள்ளளவு எட்டிய நிலையில், உபரிநீர் திறக்கப்பட்டது. நேற்று, 32 கன அடி நீர் வரத்தானது. அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால், வரத்தாகும் நீர் உபரி நீராக திறக்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயத்துக்கு, 24 கன அடி நீர் இரு வாய்க்காலிலும் திறக்கப்பட்டுள்ளது.