உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொதுத்தேர்வு விடைத்தாள் 3 மையங்களில் திருத்தம்

பொதுத்தேர்வு விடைத்தாள் 3 மையங்களில் திருத்தம்

ஈரோடு: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 1ம் தேதி துவங்கியது. 22ல் நிறைவு பெறுகிறது.தேர்வை 21,800 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத்தேர்வு, 4ல் துவங்கி, 25ல் நிறைவு பெறுகிறது. தேர்வை, 23,334 பேர் எழுதுகின்றனர்.பொதுத்தேர்வு விடைத்தாள்கள், ஈரோடு ஜேசிஸ் மெட்ரிக், ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக், கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி, அந்தியூர் மங்களம் மேல்நிலை பள்ளி மையத்தில் வைக்கப்புகிறது.இந்நிலையில் விடைத்தாள்கள், ஈரோடு ஜேசிஸ் மெட்ரிக், ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக், கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி என மூன்று மையங்களில் திருத்தப்படுகிறது.பிளஸ் 2 விடைத்தாள் ஏப்., 1ல் துவங்கி, 13ல்; பிளஸ் 1 விடைத்தாள், ஏப்.,15ல் துவங்கி, 25ல் நிறைவு பெறும் என்று, பள்ளிக்கல்வி துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை