உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திண்டல் மலை கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

திண்டல் மலை கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு: ஈரோட்டை அடுத்த திண்டலில், பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், 2.11 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக அமைச்சர்கள் சேகர்பாபு, முத்துசாமி ஆகியோர் கடந்த பிப்., மாதம் அடிக்கல் நாட்டினர். இந்நிலையில் ராஜகோபுரம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறியதாவது: ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கோவில் வளாகத்தில் சிவன் கோவில் அமைப்பதற்கான கட்டுமான பணியும் விரைவில் தொடங்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ