சமூக நலத்துறையில் பணி விண்ணப்பம் வரவேற்பு
ஈரோடு, நவ. 2-ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. www.erode.nic.inஇணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, வரும், 9ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம், சமூகவியல், உளவியல், சமூகப்பணி படித்து, கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும். தொகுப்பூதியம், 30,000 ரூபாயாகும். கூடுதல் விபரத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக பழைய கட்டடம், ஆறாவது தளத்தில் அறியலாம்.வாய்க்காலில் மிதந்த