உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை

கொங்கு பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை

ஈரோடு: பெங்களூரு டிஜிடோட் டெக்னாலஜிஸ், எஸ்.டி.மைக்ரோ எலக்ட்ரானிக்ஸுடன் இணைந்து, தேசிய அளவிலான எட்ஜ் ஏஐ இன்னோவேஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்தியா முழுவ-திலும் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து, 175க்கும் மேற்-பட்ட அணிகள் பங்கேற்றன. கடும் போட்டிக்கு பிறகு, குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வலிமையை வெளிப்படுத்திய முதல், 10 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.இதில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி இ.சி., துறையை சேர்ந்த விபின் மம்மன் வினோத் வழிகாட்டுதலில், அர-விந்தன், அகேஷ், தீபக்குமார், தீபன் மற்றும் அஸ்வின் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பு ரன்னர் அப் வழங்கப்-பட்டது. இதற்காக, 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்-டது. பரிசு பெற்ற மாணவர்களை கல்லுாரி தாளாளர் இளங்கோ, முதல்வர் பாலுசாமி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !