உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு

கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஈரோடு: ஈரோடு மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், செம்-மொழி நாள் கட்டுரை போட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நம்பியூர் குமுதா பள்ளி பிளஸ் ௨ மாணவி மேகவர்ஷினி, இரண்டாமிடம் பிடித்து, 7,௦௦௦ ரூபாய் பரிசு வென்றார். மாணவியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பாராட்டி பரிசுத்தொகை வழங்கினார். மாணவியை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளி செயலர் அரவிந்தன், இணைச்செ-யலர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி