உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சம்பத் நகர் ஓட்டுச்சாவடியில் 3 முறை இயந்திர கோளாறு

சம்பத் நகர் ஓட்டுச்சாவடியில் 3 முறை இயந்திர கோளாறு

ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி, ஈரோடு மாநகராட்சி சம்பத் நகரில் தனியார் பள்ளியில், ஓட்டுச்சாவடி எண்-97ல் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. மதியம், 3:30 மணியளவில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பழுதை சரி செய்த பிறகு, 30 நிமிடம் தாமதமாக துவங்கியது. மீண்டும் மாலை, 5:00 மணியளவில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு ஏற்பட்டு, 15 நிமிடத்தில் சரி செய்தனர். மாலை, 5:50 மணியளவில் மூன்றாவது முறையாக இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் முகவர்கள் கேள்வி எழுப்பவே, வேறு இயந்திரம் மாற்றப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது. 6:00 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்கள் பள்ளிக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின் வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ