உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளிக்கு காப்பு

கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளிக்கு காப்பு

வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்துார் சுற்று பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா, லாட்டரி, மது விற்பதை தடுப்பதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வெள்ளகோவில் தீர்த்தாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த, மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விக்ரம்சிங் ராஜ்புட், 23, என்பவரை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ