உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாட்டு சர்க்கரை, வெல்லம் ரூ.1.11 கோடிக்கு கொள்முதல்

நாட்டு சர்க்கரை, வெல்லம் ரூ.1.11 கோடிக்கு கொள்முதல்

கோபி: கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டையாக குறைந்த-பட்சம், 2,835 ரூபாய் முதல், 2,910 ரூபாய் வரை விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்) குறைந்தபட்சம், 2,670 ரூபாய் முதல், 2,700 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 4,039 மூட்டைகளும், 1.09 கோடி ரூபாய்க்கு விற்றது. உருண்டை வெல்லம், 98 மூட்டை (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,620 ரூபாய் முதல், 1,740 ரூபாய் வரை விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 1.11 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை