உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரிங்கோடு மேம்பாலத்தில் பிளாஸ்டிக் தடுப்புகளை சரி செய்து தர கோரிக்கை

ரிங்கோடு மேம்பாலத்தில் பிளாஸ்டிக் தடுப்புகளை சரி செய்து தர கோரிக்கை

ஈரோடு:ஈரோடு ரங்கம்பாளையம் அடுத்த ரிங்ரோட்டில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள ரயில்வே பாதையை கடக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் முறையாக செல்லும் வகையில், பாலத்தில் உள்ள சாலையின் நடுவில் கூம்பு வடிவிலான பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பிளாஸ்டிக் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமாகி கிடக்கிறது. சில தடுப்புகள் வாகன திசையை நோக்கி சரிந்து கிடக்கிறது. இதேபோல் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விடுகிறது.எனவே, நெடுஞ்சாலை துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்