மேலும் செய்திகள்
தீரன் சின்னமலை நினைவுதினம்
05-Aug-2025
ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில், சுதந்திர போராட்ட தியாகி குமரன் சிலை, தி.மு.க., நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சம்பத் ஆகி-யோரின் சிலை, சிலைகளின் அடியில் போட்டி தேர்வுக்கான புத்த-கங்களை கொண்ட காமராஜர் நுாலகம் அமைக்கப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று மாலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், மாநில நெச-வாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், மாவட்ட மற்றும் மாநகர, ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்-டனர்.நிகழ்வை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: சிலை-களின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போட்டி தேர்வுக்-கான நுாலகத்தில் தேவை அறிந்து மேலும் புத்தகங்கள் வைக்கப்-படும். தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்கும் கோரிக்கையும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
05-Aug-2025