உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு 2,100 கன அடியாக அதிகரிப்பு

புன்செய் புளியம்பட்டி, டிச. 18-பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு, 2,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 2,716 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு மேலும், 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக, 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு, 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு, 550 கன அடி நீர், குடிநீர் தேவைக்கு, 50 கன அடி நீர் என மொத்தம், 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 99.46 அடியாகவும், நீர் இருப்பு, 28.3 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !