உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி ராஜா நகர் பூங்கா அருகே, செல்வம் மகன் மணிகண்டன், 27; முருகன் மகன் ஏழுமலை, 22; ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. உடன், இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ