உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லாநத்தம் அருகே, சேலம் மாவட்டம், பெரியேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவக்குமார், 43; பாண்டியன்குப்பம் பகுதியில் செந்தாமரை மனைவி லட்சுமி, 60; ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை