உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 60 டன் விளை பொருட்கள் மார்க்கெட் கமிட்டி வருகை

60 டன் விளை பொருட்கள் மார்க்கெட் கமிட்டி வருகை

திருக்கோவிலுார்: விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு அதிகளவில் வேளாண் விளை பொருட்கள் விற்பனைக்கு வரும். நேற்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், கமிட்டி நிர்வாகம், வழக்கம்போல் கமிட்டி நடைபெறும் என்ற அறிவித்திருந்தது.இதனை அடுத்து நேற்று 59.4 டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. அதிகபட்சமாக நெல் 250 மூட்டை, மக்காச்சோளம் 200 மூட்டை, எள் 200 மூட்டை ஏலத்திற்கு வந்திருந்தது. இதன் மூலம் 30.09 லட்சம் வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி