உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெறும் வாகன திருட்டு, தகராறு, வழிப்பறி, பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், வரஞ்சரம், கீழ்குப்பம், கச்சிராயபாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தலா 2 நபர்கள், சின்னசேலம் போலீஸ்ஸ்டேஷனில் 3 நபர்கள் என மொத்தமாக 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை