உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்விரோத தகராறு தந்தை, மகன் மீது வழக்கு

முன்விரோத தகராறு தந்தை, மகன் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. அதே ஊரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. கடந்த 20ம் தேதி மாலை அந்தோணிசாமியை ராமச்சந்திரன், அவரது மகன் கிருஷ்ணசாமி ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் ராமச்சந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ