உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்பனை வாலிபர் கைது

சாராயம் விற்பனை வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அடுத்த தென்தொரசலுார் சுடுகாட்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அதில் தகரை கிராமத்தை சேர்ந்த பழனிசாமி, 35; கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 110 லிட்டர் கள்ளச்சாரயத்தை பறிமுதல் செய்து பழனிசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி