| ADDED : ஜூன் 28, 2024 11:12 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இளநிலை பூச்சியியல் உதவியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன் பங்கேற்று, மலேரியா காய்ச்சலுக்கான அறிகுறிகள், அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள் ரவிக்குமார், மீனாட்சி, சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், விக்னேஸ்வரன், வசந்தன், பாலா, களப்பணியாளர் புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.