உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கள்ளக்குறிச்சி : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். எலும்பு முறிவு மருத்துவர் தினேஷ்குமார், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ் ராஜா, மனநல மருத்துவர் பாக்கியராஜ், கண் மருத்துவர் காயத்ரி. முடநீக்கியல் மருத்துவர் பிரபாகரன் ஆகியோர், பரிசோதித்தனர். முகாமில், 127 பேருக்க மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ