உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பள்ளிகளில் பாட புத்தகம் வழங்கல்

அரசு பள்ளிகளில் பாட புத்தகம் வழங்கல்

சங்கராபுரம்: கல்வராயன்மலை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி நடந்தது.கல்வராயன்மலை ஒன்றியத்தல் உள்ள அரசு துவக்கப் பள்ளி, நடுநிலை பள்ளி, ஜி.டி.ஆர்.,பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் பணி நடந்தது.கல்வராயன்மலை வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர் மேகலாதேவி பாட புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார். வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் இளையான் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்