| ADDED : நவ 23, 2025 05:26 AM
கள்ளக்குறிச்சி: ஜி.அரியூரில் நடந்த மாற்றுத்திறளிகளுக்கான சிறப்பு முகாமில், 56 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருக்கோவிலுார் வட்டம் ஜி.அரியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் சிவராமன், மனநல டாக்டர் காயத்ரி, கண் டாக்டர் ரேவதி, காது மூக்கு தொண்டை டாக்டர் இர்பாத் பேகம் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 74 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 56 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 10 நபர்களுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.