| ADDED : ஜன 09, 2024 10:30 PM
கள்ளக்குறிச்சி- சின்னசேலம் அருகே மனைவியை திட்டி, தாக்கியது தொடர்பாக கணவர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.சின்னசேலம் அடுத்த பெரிய சிறுவத்துாரை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சங்கீதா,28; இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன் மணிவேல், அவரது உறவினர் மஞ்சுளா சொல்வதை கேட்டு மனைவி சங்கீதாவை தாக்கியுள்ளார்.சங்கீதா அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கணவன் மணிவேல் மீது புகார் செய்தார். அங்கு இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி மணிவேல் போலீசில் புகார் கொடுத்ததற்காக மனைவி சங்கீதாவை தாக்கினார்.மேலும் இதற்காக மணிவேலின் உறவினர்களும் சங்கீதாவை திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். சங்கீதா அளித்த புகாரின் பேரில், கணவன் மணிவேல், மஞ்சுளா மற்றும் லட்சுமி ஆகிய 3 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.