உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  குழந்தைகளுடன் பெண் மாயம்

 குழந்தைகளுடன் பெண் மாயம்

கள்ளக்குறிச்சி: முடியனுாரில் இரு குழந்தைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுார் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா மனைவி கவிதா,34; இவர்களுக்கு கலைவாணன்,10; என்ற மகனும், கயல்விழி,5; என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி காலை தனது இரு குழந்தைகளையும் பள்ளி பஸ்சில் ஏற்றுவதற்காக சென்ற கவிதா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் கவிதாவையும், குழந்தைகளையும் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கவிதாவின் கணவர் இளையராஜா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை