உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் சங்கராபுரம் முருகன், வெள்ளிமலை சத்யராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள், அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறையால் கொண்டு வரப்பட்டுள்ள யுஏடிடி 2.0 திட்டத்தால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும். தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிட பயிற்சி செய்திடுவதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்