உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்விரோத தகராறு: 2 பேர் கைது

முன்விரோத தகராறு: 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி- சின்னசேலம் அருகே முன்விரோத தகராறு காரணமாக 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்த நாககுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 40; அதே ஊரைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் தினேஷ்குமார், 22; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 17ம் தேதி காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், தினேஷ்குமார், கவியரசன், 24; சின்னசாமி, சங்கர், அவரது மனைவி செல்வநாயகி ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, தினேஷ்குமார், கவியரசன் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி