உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதான குழாயில் உடைப்பு சாலையில் வழிந்தோடும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு சாலையில் வழிந்தோடும் குடிநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், பெரிய காஞ்சிபுரம் சாலை தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரு நாட்களாக குடிநீர் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது.மேலும், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சாலை சேதமடைந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, சாலை தெருவில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை