உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அஷ்டபுஜ கோவிலில் குட்டியை ஈன்ற குதிரை

அஷ்டபுஜ கோவிலில் குட்டியை ஈன்ற குதிரை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், அஷ்டபுஜ பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் 44வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் 2 கோடி ரூபாய்க்கு மேல் திருப்பணி செய்யப்பட்டு கடந்த பிப்., மாதம் 26ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இந்நிலையில் இக்கோவிலில் உள்ள குதிரை நேற்று, குட்டியை ஈன்றது.இதுகுறித்து, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் சந்தோஷ்குமார் கூறியதாவது:சென்னையைச் சேர்ந்த பெருமாள் பக்தரான பொறியாளர் ஜெயபிரகாஷ் என்பவர், கடந்த பிப்., 23ம் தேதி, அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு, பெண் குதிரை ஒன்றை தானமாக வழங்கினார். அந்த குதிரைக்கு புஷ்பா என, பெயர் சூட்டப்பட்டது.இந்நிலையில் புஷ்பா குதிரை நேற்று, அதிகாலை 2:00 மணிக்கு குட்டியை ஈன்றது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தாய் குதிரையும், குட்டியும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குதிரை குட்டிக்கு, ரோகிணி என்ற பெயர் சூட்டி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை