உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்

சேதமடைந்த மின்கம்பம் மாற்ற வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம்,சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, நெட்டேரி கிராமம், சி.வி.எம்., நகர் பின்பக்கம் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வழித்தட பாதைக்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மின்கம்பத்தின் அடிப்பாகம் மற்றும் மேல்பாகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.பலத்த காற்றுடன் மழை பெய்தால் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை