| ADDED : ஆக 17, 2024 08:20 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், பள்ளி மேலாண் குழு நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நேற்று நடந்தது.தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். தேவரியம்பாக்கம் துவக்கப் பள்ளி மேலாண் குழு தலைவராக அம்மு, துணை தலைவராக வைதேகி மற்றும் 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதேபோல, தோண்டாங்குளம் துவக்கப் பள்ளி மேலாண் குழு தலைவராக யுவராணி, துணை தலைவராக நாகலட்சுமி மற்றும் 24 உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளனர்.இவர்களுக்கு, தோண்டாங்குளம் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.