மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
21 hour(s) ago
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
21 hour(s) ago
இன்றைய மின் தடை
21 hour(s) ago
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
21 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, பனப்பாக்கம் பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் பூட்டை உடைத்து, 20,000 ரூபாய், 2 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி கிரீடம் திருடப்பட்டது, அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் பால் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி, நேற்று காலை 5:30 மணிக்கு விளக்கை அணைக்க கோவிலுக்கு சென்றார். அப்போது, கோவிலின் முன்புற கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கோவில் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20,000 ரூபாய், 2 சவரன் தங்க செயின் மற்றும் வெள்ளி கிரீடம் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், போலீசார் இரவு நேரத்தில் ரோந்து வருவதில்லை. இதனால், இப்பகுதியல் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே, ஒரகடம் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago