உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சந்தவெளி அம்மனுக்கு நாளை ஆடி திருவிழா

சந்தவெளி அம்மனுக்கு நாளை ஆடி திருவிழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நெமந்தகார தெருவில், சந்தவெளி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஆடி திருவிழா, நாளை நடைபெறுகிறது. விழாவையொட்டி நாளை, காலை 6:00 மணிக்கு சர்வதீர்த்த குளக்கரையில் ஜலம் திரட்டும் நிகழ்வும், அம்மன் ஐந்து தெரு வீதியுலா நடைபெறுகிறது.பிற்பகல் 12:00 மணிக்கு வர்ணிப்புடன் அம்மனுக்கு கூழ்வார்க்கப்படுகிறது. இரவு 9:00 மணிக்கு சந்தவெளி அம்மன் கோவிலில் இருந்து புஷ்ப பல்லக்கில், மின் அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மன் வீதியுலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி