உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழவேற்காடில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

பழவேற்காடில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

பழவேற்காடு, பழவேற்காடு, கூனங்குப்பம் கடற்கரை பகுதியில் 'டால்பின்' மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. 5 அடி நீளமும் 150 கிலோ எடையும் கொண்ட டால்பின் அழுகிய நிலையில் இருந்ததால், பழவேற்காடு வனத்துறை அலுவலர்கள் ஆய்வுப்பணிகள் முடிந்தபின், அதே பகுதியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.இது குறித்து மீனவர்கள் தெரிவித்ததாவது:டால்பின், கடல் ஆமைகள் ஆழ்கடலில் இருப்பவை. அவை எப்போதாவது தான் கடற்கரை பகுதிக்கு வந்து செல்லும். அச்சமயங்களில் கடற்கரைக்கு வெகு அருகில், அதிக திறன்கொண்ட விசைப்படகுகள் சுற்றும்போது, அதில் சிக்கி உயிரிழக்கின்றன.சமீப காலமாக, வெளிமாநில விசைப்படகுகள் கடற்கரை அருகிலேயே மீன்பிடி தொழில் செய்கின்றன. அவற்றை கண்காணித்தால், கடல் ஆமை மற்றும் டால்பின்கள் உயிரிழப்பதை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி