வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையர் நியமனம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில், 2ம் நிலை செயல் அலுவலராக ஸ்ரீனிவாசன் கூடுதலாக கவனித்து வந்தார்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஹிந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த ராஜலெட்சுமிக்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டு காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.