உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அய்யங்கார்குளம் கைலாசநாதர் ரிஷப வாகனத்தில் வீதியுலா

 அய்யங்கார்குளம் கைலாசநாதர் ரிஷப வாகனத்தில் வீதியுலா

அய்யங்கார்குளம்: கார்த்திகை சோமவார பெருவிழாவையொட்டி, அய்யங்கார்குளம் கைலாசநாதர், காமகோட்டி அம்பாளுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளத்தில் உள்ள காமகோடி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை சோமவார விழாவையொட்டி நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மலர் அலங்காரமும் மஹாதீப ஆராதனையும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, கைலாசநாதர், காமகோடி அம்பாளுடன், மலர் அலங்காரத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மு க்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை